வியாழன், 10 பிப்ரவரி, 2011

ஸ்ரீ பைரவ வழிபாடு – 9

ஸ்ரீ பைரவரைத் துதிக்கும் சில ஸ்லோகங்கள்/துதிகள் இங்கே…

பைரவர்

இத்தகைய ஸ்தோத்திரங்களினால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வல்வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை இந்த ஸ்தோத்திரங்கள். ஆனால் இவற்றைத் துதிக்கும் முன் கீழ்கண்டவை சரியாக இருந்தால்தான் பூரண பலன் கிட்டும்.

1. இவற்றைத் துதிப்பவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

2. தினம்தோறும் குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் தொழ வேண்டும்.

3. புறதூய்மையோடு அகத்தூய்மையும் மிக அவசியம்.

4. தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல் நம்பிக்கையோடு சொல்லி வர பலன் நிச்சயம்.

5. மந்திரங்களை சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் குருமார்கள் மூலம் சரியான உச்சரிப்பைக் கேட்டறிந்து அதன் படி பாராயணம் செய்யவும்.

இனி பாராயண மந்திரங்கள்

காசி கால பைரவர்

1. ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம் வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் . நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..           பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம் நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் . காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..           ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம் ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் . பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம் காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..            புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம் பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் . வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..           தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம் கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் . ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..           ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம் நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் . ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..           அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம் த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் . அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..           பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம் காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் . நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..                     பல ச்ருதி .. காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம் க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் . ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம் ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்  இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம் ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..

2. ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்

ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !

சூல ஹஸ்தாய தீமஹி !

தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே

ஸ்வாந வாஹாய தீமஹி

தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே

தீர்கதிஷணாய தீமஹி

தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

3. சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்

ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்

ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய

அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய

ஸ்வர்ணாகர்ஷண பைரவாய

மம தாரித்தர்ய வித்வேஷணாய

ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:

4.ஸ்ரீ பைரவ த்யானம்

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்

ரக்தாங்க தேஜோமயம்

ஹஸ்தே சூலகபால பாச டமரும்

லோகஸ்ய ரக்ஷா கரம்

நிர்வாணம் ஸுநவாகனம்

திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்

வந்தே பூத பிசாச நாதவடுகம்

ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்யும் தன்மை மிக்க ஸ்ரீ பைரவரை முறைப்படித் தொழுது வணங்க நம் தீரா வினைகள் அனைத்தும் தீரும்.

ஓம் ஸ்ரீ பைரவாய நமஹ!

பைரவர்

ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்

ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம் வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் . நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..           பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம் நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் . காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..           ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம் ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் . பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம் காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..            புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம் பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் . வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..           தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம் கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் . ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..           ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம் நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் . ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..           அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம் த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் . அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..           பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம் காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் . நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம் காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..                     பல ச்ருதி .. காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம் க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் . ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம் ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்  இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம் ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..

சனி, 22 ஜனவரி, 2011

பைரவர் வழிபாடு ஆறு

சொர்ண பைரவர்

சொர்ணாகர்ஷண பைரவர்: தபசு மலை.

இதுவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலயம் தான். புதுக்கோட்டையிலிருந்து விராச்சிலை என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் (லெம்பலக்குடி வழி), ‘தபசு மலை’ என்ற சிறு மலை காணப்படுகின்றது. இந்த மலையில் முருகப் பெருமான் தண்டபாணியாகக் காட்சி அளிக்கின்றார்.

இந்த முருகன் முனிவர்களாலும், சித்தர்களாலும் போற்றி வணங்கப்பட்டவர். சப்த ரிஷிகள் தவம் செய்ததால் இந்த மலைக்குத் ‘தபசு மலை’ என்ற பெயர் வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மலை அடிவாரத்தில் சப்தரிஷிகளின் சிலையும், பீடமும் காணப்படுகின்றது. மிகவும் சக்தி வாய்ந்ததாக இந்தப் பீடங்கள் கருதப்படுகின்றன.

சொர்ணாகர்ஷண பைரவர்

இங்கு தான் தனிச் சன்னதியில், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் வீற்றிருக்கின்றார். உடன் தேவியானவர் வீற்றிருக்கின்றார். அமர்ந்த திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். ஒரு கையில், பொன் குடமாகிய பூரண கும்பத்தை ஏந்தியுள்ளார். மறு கையால் சக்தியைத் தழுவிய நிலையில் உள்ளார். ஒரு கையில் உடுக்கை, நாகபாசம், சூலம். மறு கை அபய ஹஸ்தம். தேவியானவர் ஒரு கையில் தாமரைப் பூவை வைத்துள்ளார். மறு கையால் இறைவனைத் தழுவிய வண்ணம் உள்ளார்.

நரசிம்மரின் சினம் குறைய, திருமகள் அவர்முன் தோன்றி, மடியில் அமர்ந்தது போல, அவதார நோக்கம் நிறைவேறியும், சினம் குறையாத ஸ்ரீபைரவரை சாந்தப்படுத்த, அன்னை அவர் தம் மடியில் அமர்ந்ததாகக் கூறுகின்றனர்.

சொர்ண பைரவர்

வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பது ஐதீகம். அதானால் தான் சொர்ணாகர்ஷண பைரவர் என இவர் அழைக்கப்படுகின்றார். இது போன்ற மூர்த்தம் அதிகம் காணப்படுவதில்லை. சிதம்பரத்தில் உள்ள பைரவர் சொர்ண கால பைரவர் என்றும், சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். ஆனால் அது பெரும்பாலும் கால பைரவரின் தோற்றத்தை ஒத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அவரை வழிபட்டு வந்த தீஷிதர்கள் இரவில் வைக்கும் செப்புத்தகடானது, தினம் தோறும் காலையில் தங்கமாகக் காட்சி அளித்தது என்பது வரலாறு.

பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சென்னையை அடுத்துள்ள அம்பத்தூரில் உள்ள மேனாம்பேடு என்கின்ற இடத்தில் ஓர் விநாயகர் ஆலயம் உள்ளது. அங்கு சொர்ணாகர்ஷண பைரவர் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெருமாள் கோவிலிலும் சொர்ணாகர்ஷண பைரவருக்கு எனத் தனிச் சன்னதி உள்ளதாகத் தெரிகின்றது.

ஸ்ரீ பைரவ வழிபாடு – 8

உக்ர பைரவர்

தி.வயிரவன்பட்டி: மெய்ஞானபைரவர்

திருக்கோஷ்டியூரை அடுத்து இந்த ஊர் காணப்படுவதால், தி.வயிரவன்பட்டி எனச் சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.

தல இறைவன் மெய்ஞான சுவாமி என அழைக்கப்படுகின்றார். லிங்கத் திருமேனியாக, கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இறைவி பாகம் பிரியாள் என்னும் பெயரில் காட்சி அளிக்கின்றாள்.

பைரவர் தெற்கு நோக்கிய திசையில் காணப்படுகின்றார். உக்ர மூர்த்தி. காபாலிகர்களால் வழிபட்டதாகத் தெரிய வருகின்றது. வழிபோடுவோருக்குச் சகல பேறுகளையும் அளிப்பவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. பல்வேறு கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. மிகவும் பழமையான ஆலயம்.

ஸ்ரீ பைரவர்

கண்டரமாணிக்கம்: ஆண்டப்பிள்ளை கால பைரவர்:

கண்டரமாணிக்கம் என்னும் ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. இக்கோயில் இறைவன் பெயர் சுகந்தவனேசுவரர். இறைவி சாமீப வல்லி

இங்கு பைரவர் காலபைரவராக, பல்வேறு அற்புத வேலைப்பாடுகளுடன் எழுந்தருளியுள்ளார். இது நவபாஷாணச்சிலை என்றும், பைரவ சித்தர் என்பவர் உருவாக்கி வழிபட்டது என்ற தகவலும் கூறப்படுகின்றது.

பிரம்ம கபாலத்தை ஏந்தியுள்ளதால் கபால பைரவர் என்றும், கால பைரவர் என்றும், நாடி வரும் பக்தர்களின் துயர் துடைத்து உடன் போக்குவதால் ஆண்டப்பிள்ளை பைரவர் என்றும் போற்றப்படுகின்றார்.

ஆதி பைரவர்

இங்கு சனீசுவரரும் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கின்றார்.

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றனவாம். ஸ்தல மரம் வன்னி. வன்னி பத்திரத்தால் அருச்சனை, சமித்துகளால் ஹோமம் முதலியன செய்வது விசேடம் எனக் கூறுகின்றனர்.

வன்னிமரம் சாட்சி சொன்ன திருவிளையாடல் இந்தத் தலத்தில் அரங்கேறியதாகவும் கூறப்படுகின்றது.

ஸ்ரீ பைரவ வழிபாடு – 7

பைரவர்கள்

வயிரவன்பட்டி: பைரவர்

நகரத்தார்களுக்கென்றுள்ள ஒன்பது கோயில்களுல் மிக முக்கியமானது வயிரன்பட்டியாகும்.

இங்கு இறைவன் வளரொளிநாதர் எனப்படுகின்றார். பைரவர் நின்ற திருக்கோலத்தில் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கின்றார். பொதுவாக சிவாலயங்களில் இறைவனுக்கு இடப் புறம் அன்னை வீற்றிருப்பாள். ஆனால் இங்கு அன்னை வீற்றிருக்க வேண்டிய இடத்தில் அதற்குப் பதிலாக ஸ்ரீ பைரவர் வீற்றிருக்கின்றார். அதன் பிறகு தான் அன்னை ஸ்ரீ பைரவருக்கு இடப்புறம் காட்சி தருகிறாள்.

வைரவர்

அதாவது முதலில் சிவன் கிழக்கு நோக்கிக் காட்சி தர, அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பைரவர் தெற்கு நோக்கியும், அதனைத் தொடர்ந்து அன்னையும் தெற்கு நோக்கியும் காட்சி தருகின்றாள். இது வேறு எங்கும் காணப்படாத, இத்திருக்கோயின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். இதன் மூலம் அன்னையின் பணியையும் ஸ்ரீபைரவரே ஏற்றுச் செய்வதாக நம்பப்படுகின்றது.

மகா பைரவர்

அஷ்டமி போன்ற தினங்களில் சிறப்பு ஹோமம் முதலியன செய்யப்படுகின்றன.

ஸ்ரீபைரவர் இங்கு நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், ஞமலி வாகனத்துடன் காட்சி தருகின்றார். ஒரு கையில் சூலம், மறு கையில் உடுக்கை, நாக பாசம் முதலியன ஏந்தியவாறு காட்சி தருகின்றார். இடையில் நாகாபரணம் அணிந்துள்ளார். சத்ரு சம்காரத்திற்கும், ஏவல் முதலிய செய்வினைக் கோளாறுகளை நீக்குவதிலும் நிகரற்றவர்.

விநாயகர், முருகர் முதலியோர் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றனர்.

கோயிலின் வெளிப்புறத்தே கருப்பண்ணசாமி எழுந்தருளி உள்ளார். ஆனால் அவருக்கு உருவம் கிடையாது. வெறும் வாள், ஈட்டி, வேல் போன்ற ஆயுதங்களே அங்கு வழிபடப்படுகின்றன. இதுவும் ஒரு சிறப்பாகக் கருதப்படுகின்றது. கோயிலின் வெளியே அழகிய திருக்குளமும், மண்டபமும் காணப்படுகின்றது. மிகவும் அமைதியான சூழலில் கோயில் உள்ளது.

இக்கோயில் காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தில் இறங்கி சுமார் 1 கி..மீ நடக்கவேண்டும்

ஸ்ரீ பைரவ வழிபாடு – 6

இதில் உள்ள ஸ்ரீ பைரவ வழிபாடு அனைத்தும் http://ramanans.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/நண்பரின் தளத்தில் இருந்து எடுத்தது அவருக்கு என் நன்றிகள் பல

ஸ்ரீ பைரவ வழிபாடு – 5

பைரவ சிற்பம்

கோட்டை பைரவர்:

‘திருமயம்’ தீரர் சத்திய மூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊர். இங்குள்ள சத்தியகிரீசுவர் ஆலயமும், சத்திய மூர்த்திப் பெருமாள் ஆலயமும் மிகவும் புகழ் பெற்றவை. இரண்டுமே பல்லவர் காலத்தில் மலையைக் குடைந்து பாறைகளைச் செதுக்கி குடைவரையாய் உருவாக்கப்பட்டவை. பல்வேறு அற்புதங்களையும், சுரங்கப் பாதைகளையும் உடைய ஆலயம் இது. உலகத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளி கொண்ட பெருமாள் இங்கு தான் வீற்றிருக்கிறார். திருமுகத்தை ஒரு சாளரம் வழியாகவும், திருப்பாதத்தை மற்றொரு சாளரம் வழியாகவும் காணும் அளவிற்கு நீளமான, ஒரே கல்லால், பாறையைக் குடைந்து உருவாக்கிய சிற்பம். திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீரங்கத்திற்கு முன்பாகவே இந்த திருத்தலம் தோன்றியதாக ஐதீகம்.

திருமயம் மலைக்கோட்டை

இங்குள்ள மலைக் கோட்டையைக் காவல் காக்கும் பைரவர் தான் கோட்டை பைரவர் என அழைக்கப்படுகின்றார். கோட்டை முனீசுவரர் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆயினும் நின்ற திருக்கோலம், நாக சூல பாசங்களை ஏந்தியுள்ளது போன்றவற்றைப் பார்க்கும் பொழுது பைரவர் என்பதே சரியானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படும் இவர், இந்த மலையையும், ஆலயத்தையும், இந்த ஊரையும் காப்பதாக ஐதீகம். கோட்டையின் வடக்கு வாசலில், வட புறத்தைப் பார்த்தவாறு காட்சி அளிக்கின்றார். அவர் தம் கண்ணுக்கு முன்னால் பரந்து விரிந்து காணப்படுகின்து பாம்பாறு. பாம்பு போல வளைந்து, நெளிந்து காணப்படுவதால் இப்பெயர்.

வாகனங்களில் அந்த வழியாகச் செல்வோர், பெரும்பாலும் இறங்கி, நின்று, தரிசித்த பின்னரே பயணத்தை மேற் கொள்கின்றனர். (வழித்துணையாக இவர் உடன் வந்து காப்பதாக ஐதீகம்). புதுக்கோட்டை டூ மதுரை, காரைக்குடி மார்க்கத்தில், பேருந்துகள் செல்லும் சாலையின் வழியில் தான் இந்த ஆலயம் உள்ளது. 24 மணி நேரமும் தரிசிக்கலாம்.