செவ்வாய், 24 மே, 2011

சந்தோஷம் தரும் சொர்ண ஆகர்ஷன பைரவர்

சந்தோஷம் தரும் சொர்ண ஆகர்ஷன பைரவர்

சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். நீங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவரா? அப்படியென்றால் , நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.
இவரை தேய்பிறை அஷ்டமியிலும் , ராகு காலம் சனி ஓரையுலும் தரிசிப்பது நல்ல பலன் தரும். இதுதவிர, சொர்ண ஆகர்ஷ்ன பைரவருக்கு நடைபெறும் சகல அபிஷேக, அலங்கர பூகைளில் கலந்து கொண்டு பிராத்திப்பதன் மூலம் அவரது முழுமையான அணுகிரகத்தை அடையலாம்.
அப்போது பால்,தேன்,இளநீர், பன்னீர், திருமஞ்சன பொடி , மஞ்சள்,சந்தனம், பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகப் பொருட்களுடன் செவ்வரளிப் பூக்கனையும் சொர்ண ஆகர்ஷன பைரவரின் பூஜைக்காக கொடுப்பது நல்லது.
இந்த அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும் போதும், செவ்வரளிப் பூக்களைக் கொண்டு பூஜை நடத்தப்படும் போதும்,பைரவர் திருமந்திரத்தை மனதில் பிரார்த்தித்து, கோரிக்கைகளை சொர்ண ஆகர்ஷன பைரவரிடம் சமர்ப்பித்தால் பிராத்தனைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்கிறார்கள்.
மேலும், சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வடை மாலை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன், இவருக்கு நைவேத்தியமாக தயிர்சாதம் படைத்து வழிபடுவதும் சிறப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக