திங்கள், 26 செப்டம்பர், 2011

அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில்


சிவன் பூஜித்த கோவில்
ஆதியிலேயே இறைவன் இறைவி பராசக்தியானவளை மதுரையிலே மலையத்வஜ பாண்டியன் மகளாக அக்கினி குண்டத்திலே அவதரிக்கச் செய்தார்.
`தேவி மும்முலை தடாதகை' என்கிற பெயருடன்
ஆய கலைகள் 64 நான்கினையும் தேர்ச்சியுடன் கற்று
திக்விஜயம் செய்து இறுதியாக கைலாய மலையில் நந்தி மற்றும் பூத கணங்களை வென்று
இறைவனை பாத்திரமாத்திரத்திலேயே அகந்தை அழிந்து
தன் கணவர் இவரே என்று உணர்ந்து
மதுரையிலே திருமணக்கோலம் பூண்டு வர வேண்டுகிறாள்.
இறைவன் சோமசுந்தர பாண்டியர் என்கிற பெயருடன்
மதுரையிலே மாப்பிள்ளை கோலம்பூண்டு
எல்லாம் வல்ல சக்தி அம்பிகை மீனாட்சியை திருமணம் செய்து கொள்கிறார்.
திருமண கோலத்திலேயே தன் ஆன்மாவினை நடுவூர் என்கிற மதுரையம்பதிலேயே ஆலயம் அமைத்து சிவபூஜை செய்கிறார்.
அவர் ஆத்மார்த்த பூஜை செய்த சிவ ஆலயமே மதுரை
`இம்மையிலும் நன்மை தருவார்' ஆலயம் ஆகும்.
மேலும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ கால பைரவர் எழுந்தருளி உள்ளார்.
சிவனின் அம்சமாகிய பைரவரின் வடுகர் என்றும் சட்டநாதர் என்றும் ஆபதூதாரணர் என்றும் அழைக்கின்றார்கள்.




ஸ்ரீ கால பைரவர்;
சகல பிணிகளுக்கும் மனபயம், புத்தி தடுமாற்றம், ஊழ்வினை துன்பம்,
கடன் தொல்லைகள், தாமதமான செயல்பாடுகளுக்கும் விமோசனம் அளிக்கும் கண்கண்ட தெய்வம்.
இவரே கதி என சரணடையும் எல்லா பக்தர்களையும் இவர் நீடுழி வாழ வைத்துள்ளார்.
காலபைரவருக்கு இந்த கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும்
மற்றும் தேய்பிறை அஷ்டமி அன்றும் விசேஷ பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்சிணாமூர்த்தி :


இந்த கோவிலில் சிவனின் அம்சமாகிய தட்சிணாமூர்த்திக்கு வியாழன்தோறும் விசேஷ வழிபாடுகள், கூட்டு பிரார்த்தனைகள் சிறப்பாக நடந்து வருகிறது.
இந்த கோவிலில் செய்ய கூடிய சிவ வழிபாட்டில் அனைவரும் குருவினுடைய மந்திரங்களை சிவாச்சாரியார் சொல்ல,
அதை அவ்வாறே பக்தர்களும் திருப்பி சொல்லி வழிபாடு செய்வது விசேஷ அம்சமாகும்.
சகல பிணிகளையும் நீக்க வல்ல ஜ்வரஹர மகாலிங்கம் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அபிஷேகம் :


இவருக்கு பிரதி வாரம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள்
பால், இளநீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து,
அர்ச்சனை செய்யும் போது மிளகு கொண்டு சென்று அர்ச்சனை செய்தால் தேகஆரோக்கியம் பெற்றிடலாம்.
சகல பிணிகளுக்கும் இங்கு பூஜை செய்து தரக்கூடிய மிளகு மிக விசேஷமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக